வவுனியா கனகராயன்குளம் கொல்லர்புளியங்குளத்தை சேர்ந்த க.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவி செல்வராசா சரணிகா (16) கடந்த 27.02.2015 அன்று காடையர்களால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு மரணமடைந்துள்ளார்.
சரணிகாவின் குடும்பத்தினரை வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள் 03.03.2015 அன்று நேரில் சந்தித்து சம்பவம் தொடர்பில் கேட்டறிந்ததோடு, கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்துக்கும் சென்று, மாணவியின் மரணத்துடன் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைதுசெய்து சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினர்.