வவுனியா, மடுக்கந்தைப் பகுதியில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று(04.03) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வயல் ஒன்றில் வேலை செய்துவிட்டு மண்வெட்டியுடன் வீடு நோக்கி சென்றவர் மீது மின்னல் தாக்கியதில் அவர் மரணமடைந்துள்ளார். ஹமித சிரந்த (19) என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். இவரது சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.