வவுனியா வடக்கில் அதிபர், ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கும் பாடசாலை!!

587

chool

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் மாணவர்கள் இருந்தும் அதிபரும், ஆசிரியர்களும் இல்லாமல் கரப்புக்குத்தி அ.த.க.பாடசாலை இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்பாடசாலையில் கடமையாற்றிய அதிபர் கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமாகிவிட்டதையடுத்து, இப்பாடசாலை இவ்வாறு இயங்குவதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலைமை தொடர்பாக வடமாகாணக் கல்வி அமைச்சுச் செயலாளருக்கு தெரிவித்தும், இன்றுவரை அதிபரோ, ஆசிரியரோ நியமிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் மரணமடைந்ததும் புதிய அதிபரை நியமிப்பதற்கான வழிமுறைகளை வலயக் கல்விப் பணிப்பாளர் கைவிட்டு விட்டு, இம்முறை தரம்.5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான விண்ணப்பத்தை அருகில் உள்ள பாடசலைக்கூடாக அனுப்பியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.