இந்திய மாநிலமான நாகலாந்தில் பலாத்கார வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாலிபரை பொது மக்கள் இழுத்து வந்து சரமாரியாக தாக்கி கொன்றுள்ளனர்.
வங்கதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்து சிமாப்பூருக்கு வந்த சையது என்ற அந்த நபர் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்துள்ளார்.
இந்நிலையில் அவர் 20 வயது இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததாக கடந்த மாதம் 25ம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிமாப்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த பலாத்கார சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சிமாப்பூரில் திரண்ட 4000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊர்வலமாக மத்திய சிறைக்கு சென்று வன்முறையில் ஈடுபட்டனர்.
பின்னர், சிறையில் நுழைந்த அவர்கள் சையதை வெளியே இழுத்து வந்து நிர்வாணப்படுத்தி அடித்ததில் படுகாயம் அடைந்த அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.