அமெரிக்கா நியூயோர்க் நகரிலுள்ள லாகார்டியா விமான நிலையத்தில் பயணிகள் விமானமொன்று ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று வேலியில் மோதி வியாழக்கிழமை விபத்துக்குள்ளானதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் வீசி வரும் பனிப்புயல் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.மேற்படி விபத்தையடுத்து விமானத்திலிருந்த 127 பயணிகளும் 5 விமான ஊழியர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
அவர்களில் 24 பேருக்கு சிறியளவான காயங்கள் ஏற்பட்டிருந்தாகவும் எவரும் பாரதூரமான காயங் களுக்கு உள்ளாகவில்லை எனவும் கூறப்படுகிறது.
காயமடைந்தவர்களில் இருவர் மட்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.அட்லான்டாவிலிருந்து நியூயோர்க்கிற்கு பயணத்தை மேற்கொண்ட ‘டெல்ற்றா 1086’ விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தால் விமானத்தின் முன் பகுதியும் இறக்கையொன்றும் சேதமடைந்துள்ளன.