சங்கக்கார ஓய்வுபெறக்கூடாது என வலுக்கும் குரல்கள் : மண்டியிட்டுக் கேட்டுக்கொண்ட மத்யூஸ்!!

668

Sangakkaara

இலங்கை கிரிக்கெட் அணியில் பல சாதனைகளை படைத்ததுவரும் சங்கக்கார ஓய்வு பெறக்கூடாது என்று இலங்கை அணித்தலைவர் அஞ்சேலோ மத்யூஸ் மண்டியிட்டு கேட்டுக்கொண்டுள்ளார்.

2015 உலகக்கிண்ண போட்டி முடிந்த பின்னர் சங்கக்கார ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். இலங்கையின் சிறந்த துடுப்பாட்ட வீரர், விக்கெட் காப்பாளர் என்ற பெயர்களுக்கு சொந்தக்காரர் சங்கக்கார. கிரிக்கட்டில் இவர் படைத்த சாதனைகள் ஏராளம். மேலும், கிரிக்கெட் ஆட்டத்தின் சிறந்த தூதர் சங்கக்கார என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவரது ஓய்வு குறித்து இலங்கை அணித்தலைவர் மத்யூஸ் கூறியதாவது, நான் அவரிடம் மண்டியிட்டு கேட்டுக் கொள்கிறேன் ஓய்வு பெற வேண்டாம் என்று, ஆனாலும் அவரது ஆசையையும், முடிவையும் பெரிதும் மதிக்கிறேன். நாட்டுக்காக அவர் ஒவ்வொரு முறை சிறப்பாக ஆடியதற்கு அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் தனது முடிவில் மாற்றமில்லை என்று கூறிய சங்கக்கார, “ஓய்வு பெறுவது என்பது ஒருவரது உடல்நிலை தொடர்பான விடயமல்ல. சரியான உணர்வு மற்றும் கால நேரமே ஓய்வை தீர்மானிக்கும் என்று கூறியுள்ளார்.

நடைபெற்றுவரும் உலகக் கிண்ண ஆட்டத்தில் சங்கக்காரவின் துடுப்பாட்டம் என்றுமில்லாதவாறு அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக 100 ஓட்டங்களைப் பெற்று வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் சங்கக்கார.

இன் நிலையில் சங்கக்கார ஓய்வுபெறக்கூடாது என்றும் தொடர்ந்து சில வருடங்களுக்கு விளையாட வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.