சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம் பாரதியின் பாடலை பாராளுமன்றத்தில் கூறிய மோடி!!

697

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தை வந்தடைந்தார். அவரை, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ வரவேற்றார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடுவார்.

இந்த பாராளுமன்றம் ஆசியாவின் பழமையான பாராளுமன்றங்களில் ஒன்று. இரு நாடுகளுக்கும் இடையில் கலாச்சார பரிமாற்றம் இருப்பது பெருமை அளிக்கிறது.

இரண்டு நாடுகளும் இணைந்து செயற்பட்டால் இலக்கை விரைந்து அடைய முடியும். என இந்தியப் பிரதமர் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

தெற்காசியாவில் இலங்கை வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. இலங்கையில் நடைபெற்ற தேர்தல் ஜனநாயகத்தின் கொண்டாட்டம்.

அண்டை நாடுகளின் வளர்ச்சிக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும். அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்யலாம் என்பதை இலங்கைதான் முடிவு செய்ய வேண்டும்.

கடுமையான தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொண்டு சமாளித்து வருகின்றோம். இந்திய ரிசர்வ் வங்கி 1.5. பில்லியன் டொலர்களை இலங்கைக்கு உதவியாக வழங்கியுள்ளது.

இலங்கையின் ரயில்வே திட்டத்திற்கு 350 பில்லியன் டொலர்களை இந்தியா வழங்கவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அணு ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. கடலோர பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது இரு நாடுகளின் பொறுப்பாகும்.

இரு நாடுகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். இதனை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும். இலங்கை – இந்திய உறவிற்கு புத்துயிர் கொடுக்க வேண்டும்.

இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு முதல் வெளிநாட்டு விஜயமாக வருகை தந்தமை பெருமை அளிக்கின்றது. நாளை தலைமன்னாருக்கு விஜயம் செய்ய உள்ளேன்.

இந்தியாவின் தேசிய கவிஞரான சுப்ரமணியபாரதி சிங்கள தீவினுக்கோர் பலம் அமைப்போம் என படினார் சமய, மொழி, கலாசாரம் போன்றவற்றால், இந்தியாவுக்கு இலங்கைக்கும் நெருக்கமான நீடித்த உறவுகள் இருந்து வருகிறது. என தெரிவித்து உரையை நிறைவு செய்தார்.

11 13.3.20 13.3.21 13.3.22