யாழ் புதிய அடையாளத்தைக் காட்டுகின்றது : யாழில் மோடி!!(படங்கள்)

460

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.

யாழ் நூலகத்தில் யாழ்ப்பாண கலாசார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இதன்போது அவர் கூறியதாவது,

யாழ்ப்பாணம் புதிய அடையாளத்தை காட்டுகின்றது. இலங்கையும் இந்தியாவும் பௌதீகமான தொடர்புகள் மட்டுமின்றி, கலாச்சாசர ரீதியான விடயங்களிலும் ஒன்றுபட்டுள்ளன என்பதை எல்லோரும் அறிவார்கள்.

யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்திற்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். குறித்த காலப்பகுதிக்குள் யாழ் கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும் என உறுதியளிக்கிறேன்.

யாழில் நிர்மாணித்து கொடுக்கப்படும் கலாச்சார நிலையம் மிகவும் புராதன நுட்பம் வாய்ந்த கலாச்சார விடயங்களை அடையாளப்படுத்த போகிறது.

யாழ்ப்பாணத்தில் இருந்த நூலகம் உலகத்தின் மிகப் பெரிய நூலகமாக இருந்துடன் அதில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இருந்தன.

பின்னாளில் அது எரிக்கப்பட்டது. எரிக்கப்பட்ட புத்தங்களை நாங்கள் வழங்குவோம். மிகவும் பிரசித்தமான மற்றும் முக்கியமான புத்தகங்களை வழங்குவோம்.

ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய சகோதரத்துவம், சொந்த அர்ப்பணிப்பு என்பன தேவை. இலங்கையின் அபிவிருத்திக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும், நான் என்றும் உங்களுடன் இருப்பேன் என மோடி கூறினார்.

21 22 23 24 25