மத்திய நைஜீரியாவிலுள்ள கிராமமொன்றில் அதிகாலை வேளையில் நடத்தப்பட்ட தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உட்பட பெருந்தொகையானோர் பலியாகியுள்ளனர்.
பெனு மாநிலத்தில் எக்பா கிராமத்தில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 95 க்கு மேற்பட்ட கிராமவாசிகள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
கிராமவாசிகள் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த வேளையிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி பிராந்தியத்தில் புலானி இனத்துவ குழுவைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்களுக்கும் விவசாயிகளுக்குமிடையே மோதல்கள் இடம்பெறுவது வழமையாகவுள்ளது.