நைஜீரிய கிராமத்தில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 95 பேர் உயிரிழப்பு!!

452

nygeria

மத்­திய நைஜீ­ரி­யா­வி­லுள்ள கிரா­ம­மொன்றில் அதி­காலை வேளையில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தலில் பெண்கள், சிறு­வர்கள் உட்­பட பெருந்தொகை­யானோர் பலி­யா­கி­யுள்­ளனர்.

பெனு மாநி­லத்தில் எக்பா கிரா­மத்தில் இனந்தெரி­யாத துப்­பாக்­கி­தா­ரிகள் நடத்­திய தாக்கு­தலில் 95 க்கு மேற்­பட்ட கிரா­ம­வா­சிகள் உயி­ரி­ழந்­துள்­ள­தாக உள்­ளூர்­வா­சிகள் தெரிவித்தனர்.

கிராமவாசிகள் ஆழ்ந்து உறங்கிக் கொண்­டி­ருந்த வேளை­யி­லேயே இந்த துப்­பாக்கிச் சூட்டு சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

மேற்­படி பிராந்­தி­யத்தில் புலானி இனத்­துவ குழுவைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்களுக்கும் விவசாயிகளுக்குமிடையே மோதல்கள் இடம்பெறுவது வழமையாகவுள்ளது.