22 பாஸ்போட்கள், 8 அடையாள அட்டைகளுடன் ஒருவர் கைது!!

446

Arrest

பல்வேறு நபர்களின் பாஸ்போட் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்த ஒருவர் முந்தல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உடப்பில் இருந்து சிலாபம் நோக்கி பஸ்ஸில் பயணித்த போதே சந்தேகநபர் இவ்வாறு கைதாகியுள்ளார்.

பொலிஸ் அவசரப் பிரிவினருக்கு வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இவர் வசம் இருந்து பாஸ்போட்கள் 22 மற்றும் அடையாள அட்டைகள் 8ம் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் மதுரங்குளி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, இவரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.