சீன நெடுஞ்சாலையில் கெளுத்தி மீன்கள் கொட்டி கிடந்ததால் அதை அள்ளுவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.
சீனாவில் உள்ள குய்ழோ மாகாணத்தின் கைலி நெடுஞ்சாலை வழியாக மீன்களை ஏற்றிச்சென்ற ஒரு லொறி சாலைத்தடையில் ஏறி இறங்கியபோது பின்புறக் கதவு தானாக திறந்து கொண்டது.
இதனால் உள்ளே இருந்த சுமார் 7 ஆயிரம் கிலோ கெளுத்தி மீன்கள் வீதி முழுவதும் கொட்டி சிதறியுள்ளது.
அதற்குள் வீதியில் குவிந்து கிடந்த மீன்களை அக்கம்பக்கத்து பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வாளிகளில் அள்ளிச் சென்றனர். இதுபற்றிய தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் பொதுமக்களின் உதவியுடன் அந்த மீன்களை பொறுக்கி எடுத்து, சாலையோரமாக குவித்தனர்.
இதனால் அப்பகுதி நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு போக்குவரத்து தடை ஏற்பட்டது. தற்போது, இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்கள் மூலமாக பரவி வருகின்றது.