இரட்டை குடியுரிமை விவகாரத்தில் இன்று தொடக்கம் புதிய நடைமுறை!!

818

PPP

இரட்டை குடியுரிமை பெற்றுள்ளவர்களுக்கு இன்று தொடக்கம் புதிய நடைமுறை செயற்படுத்தப்படுவதாக பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நான்கு வருடங்களுக்கு பின்னர் இன்று முதல் இரட்டை குடியுரிமை விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரட்டை குடியுரிமைக்காக இதுவரை சுமார் 300 பொதுமக்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் இவர்களின் விண்ணப்பங்களும் புதிய விண்ணப்பங்களுடன் பரிசீலிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இரட்டை குடியுரிமை விண்ணப்பங்களின்போது வயது வந்தவர்களுக்கு 250, 000 ரூபா அறிவிடப்படும் என்றும் முன்னர் இது 5 இலட்சமாக இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

22 வயதுக்கு குறைந்தவர்களுக்கு 50ஆயிரம் ரூபா அறிவிடப்படவுள்ளதுடன், இரட்டை குடியுரிமைக்கான தகுதிகள் தொடர்பான விபரங்கள் குடிவரவு, குடியகல்வு திணைக்கள இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இரட்டை குடியுரிமை பெற்றுள்ள சுமார் 2000 பேர் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெறுவதாகவும் இதில் எவரேனும் குற்றமுள்ளவராக இனங்காணப்பட்டால் அவரின் இரட்டைக் குடியுரிமை ரத்துச் செய்யப்படும் என்று அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.