நீதிமன்றத்தில் சிறுவர்களை ஆஜர்ப்படுத்துவதற்கான வயதெல்லை அதிகரிப்பு!!

919

children_3

நீதிமன்றத்தில் சிறுவர்களை ஆஜர்படுத்துவதற்கான வயதெல்லையை எட்டு வயதில் இருந்து 12 வயது வரை அதிகரிப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது.

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்திற்கு அமைய புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நட்டாஷா பாலேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் எந்தவொரு சட்ட நடவடிக்கைக்காகவும் 12 வயதிற்கு குறைந்த சிறுவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 12 வயதுக்கு குறைந்த சிறுவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற தவறுகளை திட்டமிடப்பட்ட குற்றங்களாக கருத முடியாது என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

தவறு செய்யும் சிறுவர்களை புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைப்பதே மிகவும் சிறந்ததென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.