இந்தியாவை 95 ஓட்டங்களால் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அவுஸ்திரேலியா : இந்திய அணித் தலைவர் டோனி மற்றும் வீரர்களின் வீடுகளுக்கு விசேட பாதுகாப்பு!!

462

AUS

இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் மோதிய 2வது அரையிறுதி போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. இப் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய அணி தலைவர் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

இதன்படி இறுதிப்போட்டிக்குள் நுழையும் கனவுடன் களம் இறங்கிய அவுஸ்திரேலிய அணியினர் அபாரமாக துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 328 ஓட்டங்களை பெற்றனர்.

அவுஸ்திரேலிய அணி சார்பாக ஸ்மித் இரண்டு சிக்ஸர்கள் 11 பவுண்டரிகள் அடங்களாக 93 பந்துகளில் 105 ஓட்டங்களை பெற்றார். மேலும் அவுஸ்திரேலிய அணி வீரரான பின்ச் 81 ஓட்டங்களை பெற்றார்.

இந்திய அணி சார்பாக பந்து வீச்சில் யாதவ் 10 ஓவர்கள் பந்துவீசி 72 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிட்த்தக்கது.

இந்நிலையில் 329 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய இந்திய அணி 46.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களை இழந்து 233 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவியது.

இதனால் அவுஸ்திரேலிய அணி 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி சார்பாக MS டோனி அதிகூடிய ஓட்டங்களான 65 ஓட்டங்களை பெற்றார்.

அவுஸ்ரேலிய அணி சார்பாக பந்து வீச்சில் புளுக்னர் 3 விக்கெட்டுக்களையும் ஜோன்சன் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியமை குறிப்பிட்த்தக்கது.

வரும் 29ம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய- நியூசிலாந்து அணிகள் உலகக் கோப்பையை கைப்பற்றுவதற்காக பலப் பரீட்சை நடாத்துகின்றன.