ஜனாதிபதி மைத்திரியின் சகோதரர் மீது தாக்குதல்!!

504

attacked

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான வெலி ராஜு என்று அழைக்கப்படும் பிரியந்த சிறிசேன கோடரி ஒன்றினால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பொலநறுவை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலநறுவையில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் ஏற்கனவே ராஜூ மீது குற்றம் சுமத்தப்பட்டு வந்தது.

ஜனாதிபதியும் இந்த விடயத்தில் தமது சகோதரரை எச்சரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.