வவுனியா குட்செட் வீதியில் புகையிரதநிலையத்துகருகாமையில் அமர்ந்து அருளாட்சி புரியும் ஸ்ரீ கருமாரி அம்பாள் மகோற்சவ விஞ்ஞாபனம் 26.03.2015 வியாழக்கிழமை கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகியது.
மேற்படி மகோற்சவ கொடியினை ஆலய பிரதம குருவும் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் தலைவருமாகிய சிவஸ்ரீ .பிரபாகர குருக்கள் ஏற்றிவைத்தார் . மேற்படி விஞ்ஞாபனத்தின் தேர் திருவிழா எதிர்வரும் 03.04.2015 வெள்ளிகிழமை காலை ஒன்பது மணியளவில் இடம்பெறும் .