வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூடம் வவுனியாவுக்கு நேற்றைய தினம்(28.03.2015) சனிக்கிழமை விஜயம் மேற்கொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் பொன்.இராதாகிருஸ்ணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.மேற்படி நிகழ்வு கல்லூரி அதிபர் திருமதி. தியாகசோதி யுவராஜா தலைமையில் இடம்பெற்றது. தொடர்ந்து பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக கல்வி அமைச்சருடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது .
மேற்படி நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் அவர்களுடன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக எஸ்.விநோ நோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், ஹீனைஸ் பாறுக், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராசா, ஜெயதிலக, ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் இந்திரன் சஜீந்திரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.