சிறுமி ஒருவரை பணத்திற்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் ஒருவரைக் கட்டுகஸ்தோட்டைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
எட்டு வயதுடைய சிறுமி ஒருவரையே அவரது சிறிய தந்தை உறவு முறையுள்ள ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.