க.பொ.த சா/த பரீட்சையில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்கள் விபரம்!!

299

OL

நடந்து முடிந்த 2014 க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் கொழும்பு நாலந்தா கல்லூரியைச் சேர்ந்த தரிந்து நிர்மல் என்ற மாணவன் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

கம்பஹா ஹொலி குரோஸ் கல்லூரியைச் சேர்ந்த சந்தினி நவரஞ்சன அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

விசாக்கா கல்லூரியைச் சேர்ந்த அமாலி நிவரத்தன மற்றும் கண்டி மஹாமாயா கல்லூரியைச் சேர்ந்த எச்.அபேசிங்க, ரத்னாவலி மகளிர் மகா வித்தியாலய மாணவி நுவனி நெத்சரனி ஆகியோர் அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளனர்.

விபரம் வருமாறு
01.தரிந்து நிர்மல் – கொழும்பு நாலந்தா கல்லூரி
02.சந்தினி நவரஞ்சன – கம்பஹா ஹொலி குரோஸ் கல்லூரி
03.எச்.அபேசிங்க – கண்டி மஹாமாயா கல்லூரி
03. அமாலி நிவரத்தன – விசாக்கா கல்லூரி
03.நுவனி நெத்சரனி – ரத்னாவலி மகளிர் மகா வித்தியாலம்
04.தேவினி ருவன்கா ஹேமசிங்க – விசாகா மகளிர் மகா வித்தியாலயம்
05.திவ்யாஞ்சலி உத்தரா ராஜபக்ஷ – தேவி பாலிகா மகா வித்தியாலயம்
06.ரன்சிக லசன் குணசேகர – தேர்ஷ்டன் கல்லூரி
06.திலினி சந்துனிகா பரிஹக்கார – சுஜதா கல்லூரி – மாத்தறை
06.அஞ்சன ரெவிரங்க அபயதீப மதரசிங்க – மொரவக்க கீர்த்தி அபேவிக்ரம மத்திய மகா வித்தியாலயம்.