டுபாயில் யுவதியை கத்திமுனையில் வல்லுறவு செய்த இலங்கையர்!!

683

valluravu

டுபாயில் பெண் ஒருவரை கத்திமுனையில் அச்சுறுத்தி பாலியல் வல்லுறவு முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை இளைஞன் 2 வருடம் 2 மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

துபாய் நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது. தண்டனை காலம் முடிந்ததும் சமயல்காரரான இளைஞரை நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு மே மாதம் தனது நண்பர் ஒருவரின் வீட்டில் வைத்து W.S என குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் 23 வயதுடைய இலங்கை இளைஞன் சக நண்பியான பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த 23 வயது பெண்ணை குடிபோதையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். மேலும் குறித்த பெண்ணுக்கு மரண அச்சுறுத்தலும் விடுத்துள்ளார்.

வழக்கு விசாரணையின் போது குறித்த பெண்ணுடன் உடலுறவு கொண்டதை சந்தேகநபர் ஒப்புக் கொண்டுள்ளார்.

எனினும் பெண்ணை கத்திமுனையில் பாலியல் வல்லுறவு செய்யவில்லை என்றும் அவரது சம்மதத்தில் உடலுறவு கொண்டதாகவும் சந்தேகநபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற போது மது அருந்தியிருந்தமை சந்தேகநபர் ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் அந்த பெண்ணே தனது முகத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தியதாக இளைஞன் கூறியுள்ளார்.

இந்நிலையில் நண்பர் வீட்டில் இணையத்தை பயன்படுத்திக் கொண்டிருந்த போது இளைஞன் தன்னை தாக்கியதாக பெண் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

நண்பர் வீட்டில் இல்லாததை அறிந்த அவர் தன்னை அறைக்குள் அழைத்துச் சென்று கத்திமுனையில் பாலியல் வல்லுறவு முயற்சியில் ஈடுபட்டதாகவும் பின்னர் தான் ஒருவழியாக தப்பிச் சென்று காவலரிடம் முறையிட்டதாகவும் பெண் குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்பு குறித்து பிரதிவாதி 15 நாட்களில் மேன்முறையீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.