முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் விவகாரம் மே மாதம் வரை ஒத்திவைப்பு!!

966

Healmet

முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக் ­கவ­சங்கள் அணிந்து மோட்டார் சைக்­கிள்­களில் பய­ணிப்­பதற்கு தடை என்ற சட்டத்தை தற்காலிகமாக மே மாதம் வரை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக் ­கவ­சங்கள் நாளை இன்று(02.04) முதல் முற்றாகத் தடைசெய்­யப்­பட உள்ளது என பொது ஒழுங்­குகள் அமைச்சர் ஜோன் அம­ர­துங்க ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அதன்படி ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் மோட்டார் சைக்­கிளை செலுத்­து­வோரோ அல்லது பின்னால் அமர்ந்து செல்­ப­வரோ முகத்தை முழு­மை­யாகமறைக்கும் தலைக்கவசத்தை அணிந்து பய­ணித்தால் அவர்க­ளுக்கு எதி­ராக உடன் தண்டப் பண பத்திரம் பொலி­ஸா­ரினால் வழங்­கப்­படும் என கூறப்பட்டது.

இந்நிலையில் இச்சட்டத்தை எதிர்வரும் மே மாதம் முதல் அமுல்ப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் வகன சட்­டத்தின் 158 ஆவது அத்­தி­யா­யத்தின் 2 ஆவது மற்றும் மூன்­றா­வது உப பிரி­வு­களின் கீழும் 1991 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 11 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட 644ஃ 26 ஆம் இலக்க அரசின் விஷேட வர்த்­த­மானி அறி­வித்­தலின் கீழும் 2015 ஆம் ஆண்டின் தண்­டப்­பண அதி­க­ரிப்பு சட்­டத்தின் கீழும் இந் நடவ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­து.

எனினும் சாத­ர­ண­மாக பயன்­ப­டுத்­தப்­படும் தர­மான தலைக் கவ­சங்­களில் முன் பக்­க­மாக வைசர் எனப்­படும் திறை­யினை பயன்­ப­டுத்த தடை இல்லை. அப்­படி வைசர் திரையை பயன்­ப­டுத்­து­வ­தானால் அது பல் வர்­ணங்­களைக் கொன்­ட­தாக இருக்க முடி­யாது என்­ப­தையும் சட்டம் குறிப்­பி­டு­வ­துடன் முகம் தெளி­வாக தெரியும் படி இருக்க வேண்டும் என்­ப­தையும் வலி­யு­றுத்­து­கின்­றது.

1983 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட 245 ஆம் இலக்க வர்த்­த­மானி அறி­வித்­தலில் இந்த விடயம் குறித்து வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. அதில் மோட்டார் சைக்­கிளில் பய­ணிப்­ப­வர்­களை 25 மீற்­றர்­க­ளுக்கு அப்பால் இருந்தே தெளி­வாக அவ­தா­னிக்க கூடி­ய­தாக தலைக்­க­வ­சங்கள் அமைய வேண்டும் என்­பது வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளமை குறிப்பிடத்தக்கது.