வவுனியாவில் கள்ளி மரத்தில் அம்மனின் உருவம் : அதிசயத்தை பார்க்க குவியும் மக்கள்!!(படங்கள்)

1069

வவுனியா, தோணிக்கல், லக்சபானா வீதியில் உள்ள வீடு ஒன்றின் வேலியில் உள்ள கள்ளி மரத்தில் அம்மனின் முகம் தென்படுகின்றது.

நேற்று பிற்பகல் குறித்த மரத்தை துப்பரவு செய்த போதே இதனைக்கண்டுள்ளனர். வீடு ஒன்றின் வேலியில் உள்ள கள்ளி மரத்தின் ஒரு பகுதியில் அம்மன் போன்ற ஒரு பெண்ணின் முகம் தெரிகின்றது.

இதனையடுத்து அப் பகுதி மக்கள் அதனை வந்து பார்வையிட்டு வருவதுடன் வழிபட்டும் வருகின்றனர். இதேவேளை, குறித்த வீட்டு உரிமையாளர் சோதிடம் பார்ப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 2 3 4 5 6 7