மஹாபொல கொடுப்பனவுத் தொகை இந்த மாதம் அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நூறு நாள் வாக்குறுதியில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல கொடுப்பனவு தொகை 5000 ரூபாவாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படாத காரணத்தினால் தற்போதைக்கு கொடுப்பனவு தொகையை உயர்த்த முடியாது.
இந்த மாதம் முதல் கொடுப்பனவு தொகை 5000 ரூபாவாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், எதிர்வரும் ஜூன் மாதம் 1ம் திகதி தொடக்கம் இந்த கொடுப்பனவு தொகை உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார். அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் எதனையும் மீறவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மஹாபொல கொடுப்பனவு தொகை உயர்த்தப்படாமைக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.