இயேசு துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்த தினமாக பெரிய வெள்ளிக்கிழமையை கிறிஸ்தவர்கள் உணர்வுபூர்வமாக நேற்று வெள்ளிக்கிழமை அனுஸ்டித்தனர்.
மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் சிலுவைச் சாவினை ஏற்றுக் கொண்ட இயேசு கிறிஸ்துவின் புனிதவெள்ளி நிகழ்வுகள் வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
புனித வெள்ளி திருப்பலி ஆலய பங்குத் தந்தை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருச்சிலுவை ஆராதனை இடம்பெற்றது.
குறித்த சடங்குகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பக்தியுடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.