தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து எதிர்க்கட்சியை உருவாக்கத் தயார் : அனுர குமார திசா­நா­யக்க!!

1063

Anura Kumara

நிமல் சிறி­பா­ல டி சில்வா தொடர்ந்தும் பாராளுமன்­றத்தின் எதிர்க்­கட்சி தலை­வ­ராக இருப்­ப­தற்கு தகு­தி­யற்­றவர். அதே­போ­ல தினேஷ் குண­வர்த்­த­னவால் எதிர்க்­கட்சி தலைவ­ராக முடி­யாது.

ஒரே கட்சி ஆளும் தரப்­பா­கவும் எதிர்த்தரப்பாகவும் இருந்து செயற்­பட அனுமதியில்லை என மக்கள் விடு­தலை முன்ன­ணியின் தலைவர் அனுர குமார திசா­நாயக்க தெரி­வித்தார். அதேவேளை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து பாராளுமன்­றத்தில் எதிர்க்­கட்­சியை உரு­வாக்க நாம் தயார் , சபா­நா­ய­க­ரி­டமும் எமது விருப்பத்தை முன்­வைத்­துள்­ள­தாக அவர் கூறினார்.

பிர­தான இரு கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­துள்ள நிலையில் பாரளுமன்­றத்தின் எதிர்க்­கட்சி யார் என்ற முரண்­பாடு ஏற்­பட்­டுள்ள சந்­தர்ப்­பதில் இது தொடர்­பாக வின­வி­ய­போதே அனு­ர­கு­மார திசா­நா­யக மேற்­படி தெரி­வித்தார் , அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது,

ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பும் தேசிய அர­சாங்­கத்தை சொந்தம் கொண்­டா­டு­கின்­றன. இரு கட்­சி­களின் அங்­கத்­த­வர்­களும் அமைச்சு பத­வி­களை வகிக்­கின்­றனர்.

ஆனால் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பில் ஒரு சிலர் தம்மை எதிர்க்­கட்­சி­யாக அடையாளப்ப­டுத்­திக்­கொண்டு விவா­திக்­கின்­றனர் , பாரா­ளு­மன்­றத்தில் நான்கு கட்­சி­களே அங்கம் வகிக்­கின்­றன, ஐக்­கிய மக்கள் சுதந்­தரக் கூட்­ட­ணியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஒரு அர­சாங்­க­மாக இருக்­கையில் அதே கட்சி எவ்­வாறு எதிர்க்­கட்­சி­யாக முடியும் , பாரா­ளு­மன்­றத்­தினை வேடிக்கையாகும் வேலை­யினை இவர்கள் செய்­கின்­றனர் .

அதேபோல் நிமல் சிறி­பா­ல டி சில்வா எதிர்க்­கட்சி தலை­வ­ராக வர முடி­யாது , அவ­ருடன் இருந்த பலர் இன்று ஆளும் தரப்­பாக மாறி அமைச்சு பத­வி­க­ளையும் எடுத்­துள்­ளனர் , இந்த நிலை­மையில் தொடர்ந்தும் அவரை எதிர்க்­கட்சி தலை­வ­ராக நிய­மிக்க முடி­யாது , நிமல் சிறி­பா­ல டி சில்­வாக்கே இந்த நிலைமை எனின் தினேஷ் குண­வர்­த­னவை எவ்­வாறு எதிர்க்­கட்சி தலை­வ­ராக்­கு­வது, இவர்கள் நான்கு பேரை இணைத்­துக்­கொண்டு தனிக்­கட்­சி­யாக காட்­டிக்­கொண்­டாலும் இவர்கள் அனை­வரும் பாரா­ளு­மன்­றத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­டணி அங்­கத்­த­வர்­க­ளா­கவே உள்ளனர்.

எனவே பாரா­ளு­மன்ற விதி­மு­றை­களை அனை­வரும் பின்­பற்­ற­வேண்டும், பாரா­ளு­மன்­றத்தில் ஆளும் தரப்பு அல்லாத இரண்­டா­வது பெரும்­பான்மை கட்சி யார் என்­பதை அவ­தா­னித்து அவர்களை எதிர்க்­கட்­சி­யாக தெரிவு செய்­வதே வழக்­க­மா­னது. ஆனால் இன்று பெரும்­பானை கட்சிகள் இரண்­டுமே ஆளும் கட்­சி­யாக இருப்­ப­தனால் எதிர்க்­கட்­சிக்­கான தகுதி தமிழ்தேசிய கூட்டமைப்­பி­னர்க்கே உள்­ளது.

எனவே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினை பாரா­ளு­மன்­றத்தின் எதிர்க்­கட்­சி­யாக நிய­மிக்க வேண்டும். அதேபோல் நாம் பிர­தி­நி­தித்­துவப் படுத்தும் ஜன­நா­யக கூட்­ட­ணியும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் ஒன்­றி­ணைந்து பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க் கட்சி அந்­தஸ்­தினை பெற­வேண்டும் என்­பதே எமதும் நிலைப்­பாடு.

எதிர்க்­கட்சி தலைவர் யார் என்­பது இரு கட்­சி­களின் இணைக்கப் பாட்டின் அடிப்­பையில் தெரிவுசெய்ய முடியும் ஆனால் உண்­மை­யான எதிர்க்­கட்­சி­யாக நாம் நிய­மிக்­கப்­ப­ட­வேண்­டி­யதே இப்போதைய அவசியமாகும். எனவே இவ் விடயத்தினை நாம் சபாநாயகரிடம் முன்வைத்துள்ளோம், பாராளுமன்ற விதிமுறைகளுக்கு அமைய சரியான முறையில் எதிர்க்கட்சியை நியமிக்க வேண்டும். இல்லையேல் அரசாங்கத்தின் தான்தோறித்தனமான போக்கினை கட்டுப்படுத்த முடியாது போய்விடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.