வவுனியாவில் தந்தை செல்வா பாலர் பாடசாலை!!

689

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகர் அமரர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 117 சிரார்த்த தினம் கடந்த 31 ஆம் திகதி அனுட்டிக்கப்பட்டதை நினைவு கூர்ந்து ஓமந்தையில் தந்தை செல்வா முன்பள்ளி நேற்று(05.04) திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா, ஓமந்தை பகுதியில் மருதங்குளம் கிராமத்தில் புதிதாக அமைக்ப்பட்ட இந்த முன்பள்ளி வவுனியா மாவட்ட தமிழரசுக் கட்சியின் தலைவரும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சருமாகிய ப.சத்தியலிங்கம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா பிரதேச தமிழரசுக் கட்சியின் செயலாளர் மா.சிவசோதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், மா.தியாகராசா, மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

அண்மையில் மீள்குடியேறிய இந்த பிரதேசத்தில் இது வரை பாலர் பாடசாலை மரத்தடியில் இயங்கி வந்த நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கனேடிய கிளையின் நிதியுதவியுடன் இந்த பாலர் பாடசாலை அமைக்கப்பட்டுள்ளது.

v1 v2