மகாவலி கங்கையில் குளிக்கச் சென்று காணாமல்போன கம்பளை சாஹிரா கல்லூரி மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பெலிஸார் தெரிவித்தனர்.
நேற்று 4 மாணவர்கள் குளிக்கச் சென்ற நிலையில் அதில் மூவர் காப்பற்றப்பட்டதுடன் ஒரு மாணவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கம்பளை சாஹிரா கல்லூரியில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளான்.