பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!!

692

Ranil

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் நம்­பிக்கை இல்லா பிரேரணை கொண்­டு­வர ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியின் பங்­கா­ளிக் கட்சிகள் தீர்­மானம் எடுத்துள்ளன.

எனினும் இப்­போ­தைக்கு அந்த திட்டம் இல்லையென முன்னாள் அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார். காலம் கடந்தும் மக்­களின் ஆத­ர­வில்லா அரசு அமை­யு­மாயின் எதிர்த்து செயற்படுவோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். நேற்று கொழும்பில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்திப்பின் போது ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் எழுப்பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது,

நடை­பெற்று முடிந்த தேர்­தலில் மக்­களின் ஆத­ரவும் தெரிவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேனவிற்கே கிடைத்­தது. ஆனால் மக்­களின் ஆத­ர­வினை பெறாத ஐக்­கிய தேசிய கட்சி அரசாங்கத்­தினை அமைத்­துள்­ள­துடன்,ரணில் விக்­கி­ர­ம­சிங்க மக்­களின் ஆணை­யின்றி பிரதமராகியுள்ளார்.

இது முற்­றிலும் பாரா­ளு­மன்ற விதி­மு­றை­க­ளுக்கு முர­ணா­னது மட்­டு­மன்றி மக்­களின் நம்­பிக்­கை­க­ளையும் வாக்­கு­க­ளையும் ஏமாற்றும் செயலாகும். தேசிய அர­சாங்­கத்தின் தலைவர் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் தலைவர் ஆவார்.

நாம் அர­சாங்­கத்தில் இல்லை.தேர்­தலில் மக்­களின் ஆத­ரவு இல்­லாத அதேபோல் தேர்­தலில் போட்­டி­யி­டாத கட்சி இன்று பாரா­ளு­மன்­றத்தின் ஆதிக்­கத்தை தன்­வ­சப்­ப­டுத்­தி­யுள்­ளது. எனவே இச்­செ­யற்­பா­டு­களை நாம் வன்­மை­யாக கண்­டிக்­கின்றோம்.

அதே­வேளை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் நம்­பிக்கை இல்லா பிரே­ர­ணை­யினை கொண்­டு­வரும் எண்ணம் இப்­போ­தைக்கு இல்லை. ஆனால் இல்­லை­யென்று நான் கூறவும் இல்லை. தேவை­யான சந்­தர்ப்­பத்தில் அர­சாங்­கத்தை கவுக்கும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்போம் என குறிப்­பிட்டார்.

இந்­நி­லையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் பங்­கா­ளி­களும் இட­து­சா­ரி­க­ளு­மான வாசு­தேவ நாண­யக்­கார, தினேஷ்­கு­ண­வர்த்­தன, விமல் வீர­வன்ச ஆகி­யோரின் முன்­னி­லையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேலும் சில உறுப்பினர்களும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றினை கொண்டுவரும் திட்டம் உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன