மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க கட்சியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பெலவத்தை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் தனது இராஜினாமா கடிதத்தை விரைவில் கட்சிக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் அவர் இங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.






