புத்­தாண்டு காலப்­ப­கு­தியில் 43 பேர் பலி!!

867

Dead

இம்­முறை புத்­தாண்டு காலப்­ப­கு­தியில் நாட­ளா­விய ரீதியில் 43 பேர் பல்வேறு அனர்த்­தங்­க­ளுக்கு முகம் கொடுத்து பலி­யா­கி­யுள்­ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி முதல் நேற்று முன் தினம் 15 ஆம் திக­தி ­வரை­யி­லான ஐந்து நாட்கள் புத்­தாண்டு காலப்­ப­கு­தி­யி­லேயே இந்த இந்த உயிரிழப்புக்கள் பதி­வா­கி­யுள்­ள­தா­கவும் அதில் 14 பேர் கொலை செய்யப்பட்­டுள்­ள­துடன் 29 பேர் வாகன விபத்­துக்­களால் உயிரிழந்துள்ளதா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

கடந்த ஆண்­டுடன் ஒப்­பிடும் போது இவ்­வா­றான கொலை மற்றும் விபத்துக்­களின் எண்­ணிக்கை குறை­வ­டைந்­துள்­ள­தாக உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர மேலும் குறிப்­பிட்டார்.

இம்­முறை புத்­தாண்டு காலப்­ப­கு­தி­யான ஏப்ரல் 11 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரையில் நாட­ளா­விய ரீதியில் 13 கொலைச் சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ள­துடன் அது தொடர்பில் 14 பேர் உயிரிழந்­துள்­ளனர். அத்­துடன் 28 விபத்துச் சம்­ப­வங்கள் இந்த ஐந்து நாட்­க­ளுக்குள் பதிவாகியுள்ளதுடன் அதன் கார­ண­மாக 29 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

கடந்த வருடம் இதே ஐந்து நாட்கள் காலப்­ப­கு­தியில் 27 கொலைச் சம்­ப­வங்­களில் 27 பேர் கொல்லப்பட்­டி­ருந்­த­துடன் 56 வாகன விபத்­துக்கள் ஊடாக 63 பேர் உயி­ரி­ழந்­தி­ருந்­தனர்.

ஊட­கங்கள் வாயி­லாக பொலிஸார் முன்­னெ­டுத்த அறி­வு­றுத்தல், செயற்­பா­டுகள் கார­ண­மா­கவே இவ்­வ­ருடம் கொலைகள், விபத்­துக்­களை இந்­த­ளவு தூரம் கட்­டுப்­ப­டுத்த முடிந்­த­தாக குறிப்­பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர இம்­முறை தீவிபத்துக்கள் கார­ண­மாக நான்­கு­ பேரே கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனுமதிக்கப்பட்ட­தாக சுட்­டிக்­காட்­டி­ய­துடன் பொது மக்­களை அறி­வு­றுத்தும் பணிக்கு பொலிஸாருக்கு உத­விய ஊட­கங்­க­ளுக்கும் நன்றி தெரி­வித்தார்.

இதே­வேளை புத்­தாண்டு காலப்­ப­கு­தியில் பொலிஸார் முன்­னெ­டுத்­துள்ள குடி போதையில் வாகனம் செலுத்தும் சார­தி­களைக் கைது செய்யும் நட­வ­டிக்­கையில் நேற்று காலை 6.00 மணி வரை 1122 சார­திகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 600 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர 404 முச்சக்கர வண்டிச் சாரதிகளும் 37 லொறி சாரதிகளும் அதில் உள்ளடங்குவதாக குறிப்பிட்டார்.