இலங்கைக்கான உதவிகளுக்கு ஐ.சி.சி. தற்காலிக தடை!!

461

ICC

இலங்கை கிரிக்­கெட்டில் மேற்கொள்­ளப்­படும் அரச தலையீடுகளை பரிசீலிக்க சர்­வ­தேச கிரிக்கெட் கவுன்சில் தீர்­மா­னித்­துள்­ளது. அதே­நேரம் திருப்­தி­ய­டை­யக்­கூ­டிய தீர்வு கிடைக்கும் வரை இலங்கை கிரிக்கெட்டிற்கு வழங்­கப்­படும் நிதி உத­வியை தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்­ளது.

சர்­வ­தேச கிரிக்கெட் கவுன்­சிலின் பணிப்­பா­ளர்கள் சபை கூடி­ய­போது இந்தத் தீர்­மானம் எட்டப்பட்டுள்­ளது. சர்­வ­தேச கிரிக்கெட் சபை விடுத்துள்ள ஊடக அறிக்­கையில்,

இலங்கை கிரிக்­கெட்டின் இடைக்­கால நிர்­வா­கக்­குழு நியமிக்கப்பட்டமைக்­கான கார­ணங்கள் மற்றும் அவ்­வா­றான செயற்பாடு­களால் சுதந்­தி­ர­மா­கவும், நியா­ய­மா­கவும் அதி­கா­ரி­களை தேர்வுசெய்­வ­தற்கு இருக்கும் உரிமை தொடர்­பா­கவும் ஐ.சி.சி யாப்பு மீறப்­ப­டு­கி­றதா என்றும் பேச்சுவார்த்தை அடித்­த­ள­மாக அமைந்­துள்­ளது.

இதற்கு திருப்­தி­ய­டை­யக்­கூ­டிய தீர்வு கிடைக்கும் வரை இலங்கை கிரிக்கெட்­டிற்கு வழங்­கப்­படும் நிதி உத­வியை தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்கத் தீர்­மா­னிக்­கப்பட்டுள்­ளது. இலங்கை கிரிக்கெட் நிர்வா­கத்தில் மேற்­கொள்­ளப்­படும் அரச தலை­யீ­டுகள் சம்­பந்­த­மாக முறை­யான பேச்சுவார்த்­தைகள் நடத்­தப்­பட்­டாலும் அது குறித்து இறுதித் தீர்மானமொன்றை எடுக்க முடி­ய­வில்லை எனவும் ஐ.சி.சி.யின் அறிக்கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

ஐ.சி.சி.யின் பணிப்­பாளர்கள் சபை கூட்­டத்தில் இலங்­கையி­லி­ருந்து எவராலும் பங்­கு பற்ற முடியாமல் போயுள்­ளது. கூட்­டத்தில் பங்­கு­பற்ற இலங்கை கிரிக்கெட் இடைக்­கால நிர்வாகக் குழு உறுப்பினரான நுஸ்கி மொஹமட் சென்றுள்ள அதேவேளை, சட்ட ரீதியாக கூட்டத்தில் பங்குபற்ற முடியா தென ஐ.சி.சி.யின் பணிப்பாளர்கள் சபை அவரிடம் தெரிவித்துள்ளது.