தெஹிவளை விலங்குகள் சரணாலயத்தில் சிங்கக் குட்டிகளுக்கு பால் கொடுக்கும் நாய்!!

322

Lion

தெஹிவளை விலங்குகள் சரணாலயத்தில் சகீனா என்ற சிங்கம் மூன்று குட்டிகளை ஈன்றெடுத்த நிலையில் தாய் சிங்கம் குட்டிகளுக்கு பால் கொடுக்க மறுத்ததால் தெஹிவளை பகுதி பெண் நாய் குறித்த சிங்கக் குட்டிகளுக்கு பால் கொடுத்து வருவதாக சரணாலயத்தின் பிரதி பணிப்பாளர் அனோமா பிரியதர்ஷினி தெரிவித்தார்.

ஒரு சிங்கம் குறித்த பெண் நாய் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் ஏனைய இரண்டு குட்டிகள் அழைத்துச் செல்லப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

2013 கொரியாவின் சியோல் பார்க் (Seoul grand park zoo) சரணாலயத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட தொர் (Thor) என்ற ஆண் சிங்கம் மற்றும் ஜேர்மனியின் Tier park Hagenbeck zoo பார்க் சரணாலயத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட sakina என்ற பெண் சிங்கத்திற்கும் நேற்று மூன்று சிங்கக் குட்டிகள் பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.