1500 பொலிஸார் பாது­காப்பு பணியில் : நாடளாவிய ரீதியில் 6000 அன்­ன­தா­ன நிலையங்களை பரி­சோ­திக்க 1800 பரிசோதகர்கள்!!

521

Wesak

புத்­தரின் பிறப்பு, பரிநிர்­வாணம் மற்றும் இறப்பை கொண்­டாடும் முக­மான வெசாக் தின கொண்­டாட்­டங்கள் நேற்று முதல் நாட­ளா­விய ரீதியில் கொண்­டா­டப்­படும் நிலையில் தலை நகர் கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் மிக விமர்­சை­யான ஏற்­பா­டுகள் செய்யப்பட்­டி­ருந்­தன.

கொழும்பில் மட்டும் வெசாக் அலங்காரப் பந்தல்கள் 9 நிறு­வப்­பட்­டுள்­ள­துடன் 15 வெசாக் வல­யங்­களும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அத்துடன் கொழும்பில் 52 இருக்கும் மேற்­பட்ட அன்­ன­தான நிகழ்­வு­களும் ஏற்­பாடு செய்யப்பட்டுள்­ளன. தலைநகரில் பல்­வேறு இடங்­களில் நிறு­வப்­பட்­டுள்ள வெசாக் அலங்காரப் பந்­தல்கள் நேற்று இரவு உத்தியோக­பூர்­வ­மாக திறக்­கப்­பட்­ட­துடன் மக்கள் பார்­வைக்­காக விடப்­பட்­டுள்­ளது.

பிர­தான­மாக கொழும்பின் கிரண்ட்பாஸ், புறக்கோட்டை மெனிங் சந்தை அரு­கிலும், கங்கா­ராமை விகா­ரையை அண்­மித்த பகுதியிலும் வழமை போன்று வெசாக் அலங்காரப் பந்­தல்கள் நிறு­வப்­பட்­டுள்­ளன.

கொழும்பு, கிரண்ட்பாஸ், பலா­மரச் சந்தி பிரதேசத்தில் இம்­முறை 47 ஆவது தடவையாகவும் வெசாக் அலங்­கார பந்­தல்கள் நிறு­வப்­பட்­டுள்­ள­துடன் புறக்­கோட்டை மெனிங் சந்தைப் பகு­தியில் 53 ஆவது தட­வை­யாக அலங்­கார பந்தல் நிறு­வப்­பட்­டுள்­ளன.

இந் நிலையில் குறித்த வெசாக் அலங்­கார பந்­தல்கள் மற்றும் வெசாக் வல­யங்­களைப் பார்­வை­யிட ஆயிரக்கணக்­கான மக்கள் நேற்றிரவு முதல் கொழும்பு நகரின் வெசாக் வல­யங்­க­ளுக்கு சென்று வரும் நிலையில் அவர்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த பொலிஸ் திணைக்­களம் நடவடிக்கை எடுத்­துள்­ளது.

அதன்­படி தலைநகரின் பாது­காப்­புக்கு மட்டும் 1500 பொலிஸார் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர்கள் சிவில் மற்றும் சீரு­டையில் தமது கட­மை­களை மேற்­கொள்வர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவான் குண­சே­கர தெரி­வித்தார்.

அத்­துடன் ஏனைய நக­ரங்­க­ளிலும் வெசாக் வல­யங்கள், வெசாக் அலங்­கார பந்­தல்­களைப் பார்­வை­யிட மக்கள் அலை மோது­வதால் ஒவ்­வொரு பொலிஸ் பிரி­வுகள் ஊடா­க வும் பொது­மக்­களின் பாது­காப்பு குறித்து விசேட நடவ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் மேலும் குறிப்­பிட்டார்.

இத­னி­டையே வெசாக் தினத்தை மையப்­ப­டுத்தி நாட­ளா­விய ரீதியில் பல­ராலும் வழங்­கப்­படும் அன்­ன­தான நிகழ்­வுகள் குறித்து பூரண அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தாக பொது சுகா­தார பரி­சோ­த­கர்­களின் சங்கம் குறிப்­பிட்­டது.
நாட­ளா­விய ரீதியில் 6000 இற்கும் அதி­க­மான அன்­ன­தான நிகழ்­வுகள் இம்­முறை ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள நிலையில் அவற்றின் தரம் குறித்து தொடர்ச்­சி­யாக அவ­தானம் செலுத்­தி­யுள்­ள­தா­கவும் அது தொடர்பில் 1800 சுகா­தார பரி­சோ­த­கர்­களைக் கட­மையில் ஈடு­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் அந்தச் சங்கம் குறிப்பிட்டது.

குறிப்பாக பான வகை தானங்களின் போது பயன்படுத்தப்பட்டுள்ள நிறக் கலவை தொடர்பில் அவதானம் தேவை என குறிப்பிடும் அந்த சங்கம் திடீர் சுற்றி வளைப்புக்களை மேற்கொண்டு அன்னதான நிகழ்வுகளின் தரம் உறுதிசெய்யப்படும் என மேலும் குறிப்பிட்டுள்ளது.