எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது!!

1015

Fuel

எரி­பொ­ருட்­களின் விலைகள் அதிகரிக்கபோவதாக மக்­களை ஏமாற்றும் நட­வ­டிக்­கை­யொன்று முன்­னெ­டுத்­து­வ­ரு­வ­தாக மின்­வலு மற்றும் எரி­சக்தி அமைச்சு தெரிவித்­துள்­ளது.

அதே­நேரம் நாட்டில் எரி­பொ­ருட்­க­ளுக்கு தட்­டுப்­பாடு நில­வுவ­தாக தெரிவிக்­கப்­ப­டு­வதில் எவ்­வித உண்­மையும் இல்லை எனவும் சுட்­டிக்­காட்­டி­யது. இதுதொடர்பில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரி விக்கப்பட்டுள்ளதாவது,

புதிய அரசின் கீழ் கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி எரி­பொ­ருட்­களின் விலைகள் குறைத்ததையடுத்து தொடர்ச்­சி­யாக இலங்கை பெற்­றோ­லிய கூட்­டு­தா­ப­னத்­திற்கு நட்டம் ஏற்பட்டுள்­ள­தனாலும் எரி­பொ­ருட்­க­ளுக்­கான கேள்வி அதி­க­ரிப்­ப­தற்கு சாத்­தி­ய­கூ­றுகள் இருப்பதனாலும் அவற்றின் விலைகள் அதி­க­ரிக்கப் போவ­தாக தகவல்கள் வெளியா­கி­யி­ருந்­தன.

இவ்­வாறு நாட­ளா­விய ரீதியில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் தக­வல்­களில் எவ்­வித உண்­மையும் கிடை­யாது. எரி­பொ­ருட்­க­ளுக்கு எவ்­வித தட்­டு­பாடும் இல்லை.

எதிர்­கா­லத்­திலும் எரி­பொ­ருட்­க­ளுக்­கான தட்­டுப்­பாடு நில­வு­வ­தற்கும் ஒருபோதும் இடமளிக்கப்படமாட்­டாது. இதே­வேளை எரி­பொ­ருட்­களின் விலை­களை அதி­க­ரிப்­ப­தற்கு எவ்விதமான தீர்­மா­னமும் எட்டப்­பட­வில்லை.

புதிய அர­சினால் கடந்த ஜனவரி 20 ஆம் திகதி உடன் அமு­லுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்­டன. பெற்­றோ­லிய கூட்­டு­தா­ப­னத்தில் ஐந்துநாட்களுக்கு போது­மான 10 ஆயிரம் மெற்றிக்தொன் எரிபொருட்களே கையிருப்பில் உள்ளதாகவும் ஐந்துநாட்களின் பின்னர் பாரிய எரி­பொருள் தட்­டுப்பாடு ஒன்று ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்புக்கள் இருப்­ப­தோடு, நாள் ஒன்­றுக்கு இரண்­டா­யிரம் மெற்­றிக்தொன் எரிபொருள் விற்பனை செய்யப்படுகின்ற அதேவேளை தற்போது 10 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருள் கையிருப்பில் உள்ளது. மேலதிகமாக எரிபொருள் கொள்வனவிற்கு போதிய அளவு நிதி வசதிகள் இல்லை.