வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கண்காட்சி இன்று(05.06.2015) பாடசாலையில் இடம்பெற்றது.
இக் கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக திரு.கோபாலப்பிள்ளை தர்மபாலன் (முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர்- வவுனியா தெற்கு) புனித அந்தோணியார் ஆலய பங்குத் தந்தை அருட்திரு எஸ்.சத்தியராஐ், அருட்சகோதரி திரேசம்மா சில்வா (அதிபர் -வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர். இங்கு சிறுவர்கள் தங்கள் படைப்புக்களை மிகவும் அழகாக காட்சிப்படுத்தியத்தை அனைவரும் கண்டுகளித்தனர்.
-வவுனியா நெற் செய்திகளுக்காக பாஸ்கரன் கதீசன்-







