மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் பூரண குணமடைய வேண்டி யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளது.
நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மன்னார் ஆயர் பூரண குணமடைந்து, தமிழ் மக்களுக்காக தொடர்ந்து பேசவேண்டியே இந்த வழிபாடு நடத்தப்பட்டது.
இந்த வழிபாட்டு நிகழ்வு யாழ்.பல்கலைகழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றுள்ளது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் சமய தலைவர்கள் கலந்து கொண்டனர்.






