வவுனியா பெரியகோமரசங்குளம் மகாவித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா நேற்று (16.06.2015) பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான மயில்வாகனம் தியாகராசா, இ.இந்திரராசா, M.P.நடராஜா மற்றும் வவுனியா தெற்கு கோட்டக் கல்விப்பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா மற்றும் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.





