11 வயதுச் சிறு­மி­ மீது வல்­லு­றவு : பேச்­சுத்திறனற்ற நபர் கைது!!

990

aAbuse

அல­வத்­து­கொடை பிர­தே­சத்தில் உள்ள பெருந்­தோட்­டப்­ப­குதி லயன் ஒன்றில் வசிக் கும் 11 வயதுடைய சிறு­மியை பாலியல் வல்­லு­ற­விற்கு உற்­ப­டுத்­தி­ய­தாக சந்­தே­கிக்­கப் ­படும் 35 வயதுடைய பேச்­சுத்­திறன் அற்ற ஒரு­வரை அல­வத்­து­கொடை பொலிஸார் 17ஆம் திகதி இரவு கைது செய்­துள்­ளனர். அத்­துடன் சந்­தேக நபரால் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை முயற்­சியும் முறி­ய­டிக்­கப்­பட்­டது.

லயன் தொகு­தியின் பொது மல­சல கூடத்­திற்கு சென்ற சிறு­மியை பின் தொடர்ந்து உள்ளே புகுந்த நபர் சிறு­மியை வல்­லு­ற­விற்கு உட்­ப­டுத்­தி­ய­தாக பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.சந்­தேக நபரை தேடிச்­சென்ற பொலி­ஸா­ருக்கு குறித்த சந்­தேக நபர் வீட்டில் கழு த்தில் சுறுக்­கிட்டு தற்கொலை செய்­து­கொள்ள முயற்சி செய்து கொண்­டி­ருந்­தது தெரியவந்தது.

இதனையடுத்துப் பொலிஸார் துரிதமாகத் தொழிற்பட்டு அவரை காப்பாற்றிய பின் கைதுசெய்துள்ளனர்.