
பங்களாதேஷ் அணிக்கெதிராக இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியா அணி 79 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.
இந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று பங்களாதேஷில் பகலிரவு போட்டியாக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 49.4 ஓவர்களில் 307 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
பங்களாதேஷ் அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கிய தமிம் இக்பாலும் சவும்ய சர்க்காரும் அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவித்தனர். இந்திய அணியின் தொடக்க பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார்இ உமேஷ் யாதவ் ஆகியோரால் தமிம் இக்பாலை கட்டுப்படுத்த முடியவில்லை.
உமேஷ் யாதவின் ஒரே ஓவரில் தமிம் 3 பவுண்டரிகள் ஒரு சிக்ஸரை விளாசினார். இதனால் 7ஆவது ஓவரில் பங்களாதேஷ் அணி 50 ஓட்டங்களை எட்டியது. இதில் தமீம் இக்பால் (60) சர்க்கார் (54) ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து ஜோடி சேர்ந்த ஹசன் மற்றும் ரஹ்மான் ஆகியோர் மீண்டும் அதிரடி ஓட்டக்குவிப்பில் ஈடுபட்டனர். இதில் ஹசன் (52)இ ரஹ்மான் (41) ஓட்டங்களையும் பெற்றனர். இறுதியில் பங்களாதேஷ் அணி 307 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.
308 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 46 ஓவர்களில் 228 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து தோல்வியைத் தழுவிக்கொண்டது.
இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக தவான் மற்றும் ஷர்மா ஆகியோர் களமிறங்கினர். இதில் ஷர்மா(63), தவான் (30), சுரேஷ் ரெய்னா(40), ஜடேனஜா(32), குமார் (25) ஓட்டங்கள் வீதம் பெற்றுக்கொண்டனர்.
ஏனைய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர். இந்திய அணித் தலைவர் தோனி 5 ஓட்டத்துடனும்இ கோஹ்லி ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சாளரான ரஹ்மான் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார்.
உலகககிண்ணக் காலிறுதியில் பெற்ற தோல்விக்காக இந்தியாவிற்கு சிறப்பான பதிலடி கொடுத்துள்ளது பங்களாதேஷ்.





