மரண அறிவித்தல் : ஞானப்பிரகாசம் ஞானதயாளன்!!

1323

Notice

ஞானப்பிரகாசம் ஞானதயாளன்
(ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் வவுனியா தெற்கு)

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் வவுனியா கரப்பன்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் ஞானதயாளன் அவர்கள் 22.06.2015 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் நேசம்மாவின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருளானந்தம் திரேசாபுஸ்பம் அவர்களின் அன்பு மருமகனும் மேரிஅக்னெசின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற ஞானதேவி, கிருபாதேவி, காலஞ்சென்ற நேசதயாளன், சாந்தாதேவி, சந்திரவதனி ஆகியோரின் அன்புச் சகோதரனும்

ஜசில்ட்தயாளினி, அன்ரனி ஞானராஜ் (வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்) குயின்ராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும் கிறீன்இன்பராஜ், சோபனா. ஆகியோரின் அன்பு மாமனாரும், பிறிற்றிகா, பிறிற்றியன் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 24.06.2015 புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இல.33 கரப்பன்காடு வவுனியா அவரது இல்லத்திலிருந்து இறுதிக் கிரியைக்காக வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு இறம்பைக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இல.33 கரப்பன்காடு.
வவுனியா

தகவல்- குடும்பத்தினர்
0777445846.