வவுனியா உக்குளாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்தில் இன்று (25.06.2015) பிரதேச செயலாளர் கா.உதயராசா தலைமையில் காணிக்கச்சேரி நடைபெற்றது.
இன் நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான அகிலன், அனுரா, தி.கவிதா, க.ஜெந்தா, வசீகரன், கஜந்தன் கிராம சேவையாளர் சுயனித்தா பொருளாதார உத்தியோகத்தர் ராதிகா, கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் மகளிர் அமைப்பினர் இணைந்து நடாத்தினர்.
இந் நிகழ்வில் 114 பேருக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான மீளாய்வு செய்யப்பட்டு இவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
-பிராந்திய செய்தியாளர்-






