யாழில் மாணவியை துஷ்பிரயோகம் செய்த தாயின் கள்ளக் காதலன் கைது!!

337

arrests

10ம் தரத்தில் கல்வி பயிலும் பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் ஒருவர் சாவகச்சேரிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ். நாவற்குழி மேற்கு, ஐயனார் கோவிலடி பிரதேசத்தில் தாயாருடன் குறித்த மாணவி வசித்து வருகிறார். தந்தையைப் பிரிந்து வாழ்ந்து வருவதால் தயார் பிறிதோர் ஆடவனுடன் தொடர்பைப் பேணிவருவதாக தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், தாயின் காதலன் மாணவியை பாலியல் தூஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாகவும், மாணவியைத் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு வற்புறுத்திவருவதாகவும் விசாரணையின்போது தெரியவந்துள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து நேற்றிரவு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பொலிஸார், இன்று சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளனர்.