வவுனியா நெடுங்கேணி புளியங்குளம் வீதியில் இன்று (10.07.2015) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
இன்று மாலை 6.30 மணியளவில் வவுனியா நெடுங்கேணி புளியங்குளம் வீதி குழவிசுட்டான் சந்தியிலிருந்து 500 மீட்டர் தொலைவில் முல்லைதீவிலிருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கி பயணித்த மகேந்திரா பட்டா ரக வாகனம் கட்டுபாட்டை இழந்து மரத்தின்மீது மோதி விபத்துக்குள்ளாகியதில் வாகனத்தின் சாரதியும் நடத்துனரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
சாரதி உறங்கியதால் இவ் விபத்து நிகழ்ந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இவ் விபத்தில் முல்லைத்தீவைச் சேர்ந்த முஹமது நிஜாஸ், புத்தளம் நுரைச்சோலையைச் சேர்ந்த
ஏ.எச்.எம்.ரியாஸ் ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த நெடுங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக செய்திகளைத் தெரிந்துகொள்ள வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.
-B.மோகன்ராஜ் மற்றும் Y.கிருபன்-