க.பொ.த. உயர்­த­ரப்­ப­ரீட்­சையின் பொரு­ளியல் வினாப் பத்திரம் வெளி­யா­னது!!

456

exam-sittingக.பொ.த. உயர்­த­ரப்­ப­ரீட்­சையின் காலை நடை­பெற்ற பொரு­ளியல் 1 வினாப்­பத்­திரம் பரீட்­சார்த்­தி­களின் கைக­ளுக்கு சென்­றது எப்­படி?

உண்­மையில் பரீட்­சைத்­தி­ணைக்­கள அறி­வித்­த­லின்­படி இப்­பத்­தி­ரத்­தி­லேயே பரீட்­சார்த்­திகள் விடை­ய­ளித்­தி­ருக்­க­வேண்டும். இது தொடர்­பாக அப்­பத்­தி­ரத்­திலே ஆரம்­பத்தில் தெளி­வாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஆனால் குறிப்­பிட்ட நிலை­யத்தில் பத்­தி­ரத்­திற்­குப்­ப­தி­லாக கட்­ட­மி­டப்­பட்ட வேறு பத்­திரம் வழங்­கப்­பட்டு அதில் பரீட்­சார்த்­திகள் விடை­ய­ளிக்­கு­மாறு கோரப்­பட்­டதாம். அத­னையே பரீட்­சைத்­தி­ணைக்­க­ளத்­திற்கு மதிப்­பீட்­டிற்­காக அனுப்­பி­யுள்­ளனர்.மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லுள்ள பட்­டி­ருப்பு மகா வித்­தி­யா­லய பரீட்சை நிலை­யத்தில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றி­ருக்­கி­றது.

இலங்­கையில் வேறு எந்த பரீட்­சை­நி­லை­யத்­திலும் வினாப்­பத்­தி­ரத்தை பரீட்­சை­மு­டிய வெளி­யில்­கொண்­டு­செல்ல அனு­ம­திக்­க­வில்லை.அதே பத்­தி­ரத்தில் விடை­ய­ளிக்­கு­மாறு கோரி அத­னையே மதிப்­பீட்­டிற்­காக அனுப்­பி­யுள்­ளனர்.ஆனால் பட்­டி­ருப்பு பரீட்­சை­நி­லைய மாண­வர்­க­ளிடம் மாத்­திரம் 1ஆம் வினாப்­பத்­திரம் உள்­ளது. இது விட­யத்தில் பரீட்­சைத்­தி­ணைக்­களம் எவ்­வாறு நடந்­து­கொள்­ளுமோ தெரி­யாது.
இது­வி­டயம் தொடர்பில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் பரீட்­சைக்குப் பொறுப்­பான உத்­தி­யோ­கத்­தரும் மட்­டக்­க­ளப்பு வல­யக்­கல்­விப்­ப­ணிப்­பா­ள­ரு­மான கண­ப­திப்­பிள்ளை பாஸ்­க­ர­னிடம் கேட்­ட­போது தமக்கு அன்று பிற்­பகல் 3மணி­ய­ளவில் பட்­டி­ருப்பு மகா­வித்­தி­யா­லய பரீட்சை நிலை­யத்தில் இம்­மு­றை­கேடு இடம்­பெற்­ற­தாக முறைப்பாடு கிடைக்கப் பெற்றதாகவும்இது தொடர்பில்பரீட்சை ஆணையாளரிடம் அறிவித்துள்ள தாகவும் தெரிவித்தார். அந்த பரீட்சை நிலையத்தில் பொருளியல் பாடம் எழுதிய பரீட்சார்த்திகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாதென்பதை வலியுறுத்துகின்றோம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.