
குருநாகல் – அலவ்வ, ஹதரலியத்த பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமியின் வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவத்தில் 16 வயதுடைய சிறுமியின் சடலமே மீட்கப்பட்டுள்னது.
சம்பவம் தொடர்பில் குறித்த தோட்டத்தின் காவலாளி மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.





