
வவுனியா பூவரசங்குளம் 8ம் கட்டைச் சந்திக்கு அருகில் இன்று (13.08.2015) காலை 7 மணியளவில் நடந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று அருகில் இருந்த சுருவம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியது. இவ் விபத்தில் பேரூந்திற்காக காத்திருந்த பெண் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.






