கோடம்பாக்கத்தை ஒரு கை பார்க்காமல் விட மாட்டேன் என, அதிரடியாக களத்தில் குதித்துள்ளார் ராய் லட்சுமி.
தமிழில் இவருக்கு பெயர் சொல்லும்படியான வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் குத்தாட்டம் போடலாமா வாங்க என்று தான் கேட்கின்றனராம்.
ஆனாலும், ராய் லட்சுமி, பேய் லட்சுமியாக நடித்துள்ள சவுகார் பேட்டையை பெரிதும் எதிர்பார்த்துள்ளார்.
இதை தொடர்ந்து அர்ஜுன் ஜோடியாக, ஒரு படத்தில் நடிக்கிறார். இதில் இலங்கை தமிழ் பெண்ணாக நடிக்கிறாராம். ராய் லட்சுமியின் திரை வாழ்வில் இனியாவது வசந்தம் வீசுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.





