எகிப்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய பணயக்கைதி படுகொலை!!

529

world-news_6எகிப்­திய கெய்ரோ நக­ரி­லி­ருந்து கடத்­தப்­பட்ட குரோ­ஷிய பண­யக்­கை­தி­யொ­ரு­வரை தாம் தலையைத் துண்­டித்து படு­கொலை செய்­துள்­ள­தாக அந்­நாட்­டி­லுள்ள ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுடன் தொடர்­பு­டைய குழு­வினர் புதன்­கி­ழமை தெரி­வித்­துள்­ளனர்.

மேற்­படி குரோ­ஷிய பண­யக்­கை­தி­யான தொமிஸ்லாவ் சலோ­பெக்கின் (30 வயது) சட­லத்தைக் காண்­பிக்கும் புகைப்­ப­ட­மொன்­றையும் எகிப்­திய சினாய் பிராந்­தி­யத்­தி­லுள்ள ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் இணை­யத்­த­ளத்தில் வெளி­யிட்­டுள்­ளனர்.

இது தொடர்பில் குரோ­ஷிய பிர­தமர் ஸொரான் மில­னோவிக் தெரிக்­கையில், தீவி­ர­வா­தி­களால் தொமிஸ்லாவ் படு­கொலை செய்­யப்­பட்­டதை 100 சத­வீதம் உறு­திப்­ப­டுத்த முடி­யா­துள்­ள­தாக கூறினார்.

தொமிஸ்லாவ் கடந்த ஜூலை மாதம் தலை­நகர் கெய்­ரோ­வி­லி­ருந்து கடத்­தப்­பட்ட பின்னர் மேற்­படி தீவி­ர­வா­தி­களால் பண­யக்­கை­தி­யாக பிடித்து வைக்­கப்­பட்­டி­ருந்தார்.

இந்­நி­லையில் அவரைக் கொன்­றுள்­ள­தாக உரிமை கோரி­யுள்ள அந்தக் குழு­வினர், அவ­ரது முதுகில் அவ­ரது துண்­டிக்­கப்­பட்ட தலை வைக்­கப்­பட்­டுள்­ளதை வெளிப்­ப­டுத்தும் புகைப்­ப­ட­மொன்றை வெளி­யிட்­டுள்­ளனர்.