இந்­தி­யாவின் 69 ஆவது சுதந்­தி­ர ­தின விழா!!

1553

india rஇந்­தி­யாவின் 69 ஆவது சுதந்­தி­ர­தின விழா நேற்று கொண்­டா­டப்­பட்­டது. இத­னை­யொட்டி இந்­தியா முழு­வதும் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

தலை­நகர் டில்­லியில் பிர­தமர் மோடி கொடி ஏற்றி வைத்­தார். இதை­யொட்டி டில்­லியில் 7 அடுக்கு பாது­காப்பு போடப்­பட்­டுள்­ளது. சென்னை கோட்டை கொத்­த­ளத்தில் தமி­ழக முதல்வர் ஜெய­ல­லிதா தேசிய கொடி­யேற்றி வைத்­துள்ளார். டில்­லியில், ஒவ்­வொரு 40 மீற்­ற­ருக்கும் துப்­பாக்கி ஏந்­திய பொலிஸார் பணியில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, பாது­காப்பு மூன்று மடங்கு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இம்­முறை பா.ஜ.க. அலு­வ­ல­கங்­களை ஐ.எஸ். அமைப்­பினர் குறி­வைத்து தாக்­கலாம் என்ற உள­வுத்­துறை எச்­ச­ரிக்கை கார­ண­மாக, இந்­தியா முழு­வதும் பொலிஸார் உசார்ப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

சுதந்­திர தின விழா நடை­பெறும் இடத்தை சுற்­றிலும் சுமார் 30 ஆயி­ரத்­திற்கும் அதி­க­மான பொலிஸார் நிறுத்­தப்­பட்­டுள்­ளனர். டில்லி பொலிஸார், துணை இரா­ணுவ படை­யினர், உள­வுத்­து­றை­யினர் என பல்­வேறு பாது­காப்பு படை­யி­னரும் ஒருங்­கி­ணைந்து, 7 அடுக்கு பாது­காப்பு பணியில் ஈடு­பட்­டுள்­ளனர்.

மேலும் உள­வுத்­து­றையின் எச்­ச­ரிக்­கையைத் தொடர்ந்து பிர­தமர் மோடிக்­கான கொமாண்டோ படை பாது­காப்பும் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. நான்கு ஆள் இல்லா விமா­னங்கள் மற்றும் ஹெலி­கொப்டர் மூல­மா­கவும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திரதின விழா நடைபெறும் இடத்தில் சுமார் 1,400 கமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.