
இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4 மணியளவில் நிறைவு பெற்றுள்ளன.
இந்நிலையில் வாக்குப் பெட்டிகளை சீல் வைத்து வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகளில் பொலிஸாரும் பாதுகாப்பு தரப்பினரும் ஈடுபட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் 70 சதவீதமான மக்கள் வாக்களித்துள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை – 65%
மாத்தளை – 65%
கம்பஹா – 70-78%
வவுனியா – 61%
அநுராதபுரம் – 65-70%
பதுளை – 65-70%
காலி – 70%
இரத்தினபுரி – 72%
கேகாலை – 70%
மாத்தறை – 70%
முல்லைத்தீவு – 71%
யாழ்ப்பாணம் – 60%
திருகோணமலை – 75%
நுவரெலியா – 70%
கொழும்பு – 70%
களுத்துறை – 70-75%
கண்டி – 70-75%
ஹம்பாந்தோட்டை – 75%
குருநாகல் – 65%





